செப்டெம்பர் மாதத்தில் கடந்த 10 நாட்களில் 900 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு குறைவடைந்துள்ள போதிலும், தற்போதைய மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும் என அதன் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.