நாட்டில் சுமார் 3.6 பில்லியன் டொலர் வெளிநாட்டு கையிருப்பு இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று (10) இடம்பெற்ற நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஒரு நாடு என்ற வகையில் இருதரப்பு வெளிநாட்டுக் கடன்கள் மட்டுமே செலுத்தப்படாமல் உள்ளதாகவும், ஏனைய அனைத்து கடன் தவணைகளும் ஏற்கனவே செலுத்தப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.