Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமதுபோத்தல்களில் போலி ஸ்டிக்கர்களை ஒட்டுவோருக்கு எதிராக நடவடிக்கை

மதுபோத்தல்களில் போலி ஸ்டிக்கர்களை ஒட்டுவோருக்கு எதிராக நடவடிக்கை

கடந்த வெள்ளிக்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில சந்தேகத்திற்கிடமான ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட 100,000 மது போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த வாரத்தை விட இந்த வாரம் கைப்பற்றப்பட்ட போலி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட மதுபான போத்தல்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

அதன்படி, சோதனை நடவடிக்கை வெற்றியடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles