Thursday, April 23, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீரில் மூழ்கி இளைஞர் பலி

நீரில் மூழ்கி இளைஞர் பலி

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வோல்ட்றீம் தோட்டத்தில் காட்டுக்கு விறகு தேடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

தலவாக்கலை, கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீரேந்திச் செல்லும் எல்ஜின் ஓயாவில் மூழ்கியே அவர் உயிரிழந்தார்.

நேற்று இடம்பெற்ற அவ்வனர்த்தத்தில் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் கூம்ஸ் தோட்டத்தில் கீழ் பிரிவைச் சேர்ந்த 20 வயதுடைய பிரபாகரன் கஜேந்திரன் என்பவரே உயிரிழந்தார்.

இது குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles