நடிகையாகவுள்ள சிறுமி ஒருவரின் ஆபாச காணொளியை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து, வைரல் ஆக்கிய குற்றச்சாட்டுக்காக 15 வயது சிறுவன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக பெலியத்த பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன் நேற்றுமுன்தினம் (23) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த காணொளியை ஒரு வாட்ஸ்அப் குழுவில் சிறுவன் பரப்பியதை ஒப்புக் கொண்டார்.
எனினும் குறித்த காணொளி எவ்வாறு அவருக்கு கிடைக்கப் பெற்றது என்பது தொடர்பான விபரங்களை சந்தேக நபர் வெளியிடவில்லை.
எவ்வாறெனினும் சந்தேக நபர் நேற்று கொழும்பு, நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
