ஹெரோயின் வைத்திருந்த போது கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பணி இடைநிறுத்தம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பொல்பிட்டிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 16ஆம் திகதி இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மன்னார் பொலிஸ் பிரிவில் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த போதே மன்னார் பிரிவின் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.