மாலைதீவு உயர்ஸ்தானிகர் அலி ஃபைஸ் மற்றும் இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு விமானப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இங்கு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஆகியோர் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் இரு தரப்பினரும் நினைவுப் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்.