கொழும்பில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற யுஎல் 195 விமானம் இந்தியாவின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக வெளியான ஊடகச் செய்திகள் தவறானவை என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை (23) UL 195 விமானத்திற்கு அவசரநிலை எதுவும் அறிவிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், விமானம் அதன் மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளில் ஒன்றில் ஒரு சிறிய சிக்கலை எதிர்கொண்டதாகக் கூறிய விமான நிறுவனம், அவ்வப்போது இதுபோன்ற விடயங்கள் நடப்பதாகவும், விமானக் குழுவினர் அவற்றைக் கையாள முழுப் பயிற்சி பெற்றதாகவும் தெரிவித்துள்ளது.