நீதிமன்றத்தினால் காலி சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ள கைதிகள் அங்குனகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு பரவியுள்ள நோய் தொற்று காரணமாக இரண்டு வார காலத்திற்கு சிறைச்சாலையின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பலபிட்டிய, எல்பிட்டிய, காலி, உடுகம மற்றும் பத்தேகம நீதிமன்றங்களில் உள்ள சிறைக் கைதிகள் அங்குனகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டு, அந்த கைதிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்துவது வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் என அதிகாரி மேலும் தெரிவித்தார்.