Tuesday, July 29, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரதபவணியில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

இரதபவணியில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

பதுளை, நமுனுகுலை பூட்டாவத்தை பகுதியில் இடம்பெற்ற இரதபவணியில் அதியுயர் மின்சாரத்தை கடத்தும் போது மின்சார் தாக்கி இருவர் உயிரிழந்துடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு மாதுளாவத்தை பகுதிக்கு சென்ற ரதம் மீண்டும் ஆலயத்திற்கு திரும்பும் வழியிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் 27 மற்றும் 37 வயதுடைய பூட்டாவத்தை பகுதியை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக பசறை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவத்தில் காயமடைந்த 30, 57 மற்றும் 43 வயதுடைய மூவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles