சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன குழு மற்றும் இந்திய மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைக்காக இலங்கை பெருமிதம் கொள்கிறது என தெரிவித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, இந்த சாதனையை மனிதகுலம் அனைவருக்கும் அர்ப்பணிக்கும் பிரதமர் மோடியின் தாராள மனப்பான்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை தொடர தலைமுறைகளை ஊக்குவிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.