ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
உதயங்க வீரதுங்க 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரியிருந்தார்.
உக்ரேனிடம் இருந்து MiG-27 போர் விமானங்களை கொள்வனவு செய்வதில் அரச நிதியை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கில், ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவராக இருந்த உதயங்க வீரதுங்க சந்தேக நபராவார்.