மீன் ஏற்றுமதி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 31 பெண் தொழிலாளர்கள் விஷ வாயு கசிவு காரணமாக லுனுவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (21) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களில் 23 பேர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய ஊழியர்கள் 8 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக லுனுவில பிரதேச வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
தங்கொடுவ, ஹல்ததுவன பிரதேசத்தில் பராமரிக்கப்படும் ஏற்றுமதிக்காக மீன் பதப்படுத்தப்படும் தொழிற்சாலையில் மீன்களை சேமித்து வைக்கும் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து இந்த நச்சு வாயு கசிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.