Monday, June 9, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோதமாக வெளிநாடு செல்வதை தடுக்க விசேட பிரிவு

சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதை தடுக்க விசேட பிரிவு

இலங்கையில் இருந்து சுற்றுலா விசா மூலம் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் பாதுகாப்பான குடிவரவு ஊக்குவிப்பு பிரிவை நேற்று (21) கட்டுநாயக்க விமான நிலைய புறப்பாடு முனையத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார திறந்து வைத்தார்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் மனித கடத்தலுக்கு எதிரான தேசிய பணிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த பிரிவு உருவாக்கப்பட்டது.

சுற்றுலா விசாவில் அண்மைக்காலமாக அதிகளவானோர் வெளிநாட்டு பணிக்கு செல்வதை தடுக்கும் வகையில் இந்த புதிய பிரிவு நிறுவப்பட்டதாக மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், குடிவரவுத் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இந்தப் பிரிவுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பிரிவின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்ததன் பின்னர் இங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles