கேகாலை – ரம்புக்கன வீதியில் ஹிரிவடுன்ன சந்தியில் இன்று (22) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கெப் வண்டியொன்றும் சிறிய ரக லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர் திசையில் இருந்து வந்த லொறி வண்டிக்கு முன்னால் பயணித்த கார் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.