இந்த வருடம் 860,000 இற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளில் இந்தியாவிலிருந்து 19,804 சுற்றுலாப் பயணிகளும், பிரித்தானியாவிலிருந்து 12,188 சுற்றுலாப் பயணிகளும் இருப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுவரை 866,744 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தீவுக்கு வந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், சீனாவில் இருந்தும் 35,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்த ஆண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.