Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்விளையாட்டுLPL கிண்ணத்தை கைப்பற்றியது கண்டி அணி

LPL கிண்ணத்தை கைப்பற்றியது கண்டி அணி

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் கண்டி அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை அவுரா அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய தம்புள்ளை அணி 20 ஓவர்களில் 04 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக, தனஞ்சய டி சில்வா 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில், 148 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய கண்டி அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக, கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles