Wednesday, August 20, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு4 கடவுச்சீட்டுகளுடன் பெண்ணொருவர் கைது

4 கடவுச்சீட்டுகளுடன் பெண்ணொருவர் கைது

நான்கு கடவுச்சீட்டுகளை வைத்திருந்த பெண் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் சென்னையில் இருந்து அதிகாலை 4.40 மணியளவில் விமான நிலையத்தில் தரையிறங்கிய பெண்ணை BIA இன் பொலிஸ் போதைப்பொருள் பிரிவு கைது செய்தது.

இந்தியாவில் வாங்கியதாக கூறி, நான்கு கடவுச்சீட்டுகளை சேலையில் மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூர்வாசிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு ஏற்பாடு செய்யும் கடத்தல்காரர்களிடம் ஒப்படைப்பதற்காக பெண் கடவுச்சீட்டுகளை கொண்டு வந்ததாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண் கல்பிட்டியை சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடவுச்சீட்டுகளுடன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles