அநுராதபுரம் – விலாச்சி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
லொறி ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்களில் பயணித்த 36 வயதான பெண்ணும், 11 வயதான அவரது மகளும் பலியானதாக பொலிஸ் தெரிவித்தது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.