Saturday, February 14, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாதிக்கப்பட்ட மக்களுக்கு பௌசர் மூலம் நீர் விநியோகம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பௌசர் மூலம் நீர் விநியோகம்

வறட்சியான காலநிலை காரணமாக நாடு முழுவதும் நீரை விநியோகிக்க சுமார் 100 பௌசர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

15 மாவட்டங்களில் 2 இலட்சத்து 2500 பேருக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

மருத்துவமனைகள் மற்றும் சமூக சேவை நிறுவனங்களுக்கு கோரிக்கையின் பேரில் நீர் விநியோகிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வறட்சியான காலநிலை காரணமாக 10 மாவட்டங்களில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் கீழ் 45 நீர் விநியோக அமைப்புகள் தடைப்பட்டுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles