ஆர்ஜென்டினாவில் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
பியூனஸ் அயர்ஸில் உள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தின் போது, பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.