இம்மாதம் முதல் 15 நாட்களில் 77,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஒகஸ்ட் மாதத்தில் இதுவரை 77,552 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
ஒகஸ்ட் மாதத்தில் 15,133 இந்திய பிரஜைகள் வருகை தந்துள்ள நிலையில், இந்தியாவிலிருந்து வரும் பார்வையாளர்கள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றது.