ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருடத்தின் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும் இம்மாதம் 21 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி, விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களை எதிர்வரும் 20ம் திகதிக்குள் விடுதிக்கு திரும்புமாறு அவர்அறிவுறுத்துகிறார்.
தற்போது ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருடத்தின் அனைத்து பீடங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும், இரண்டாம் வருட பீட மாணவர்களுக்கு எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை வழங்கப்படும் எனவும் உபவேந்தர் மேலும் தெரிவித்துள்ளார்.