இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இடமாற்ற உத்தரவுக்கு அமைய செயற்படுமாறு அவர்களுக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அதனை பொருட்படுத்தாது சில ஆசிரியர்கள் அதே பாடசாலையில் பணிபுரிவதாக புகார்கள் கிடைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.