நாட்டின் பல மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் நாயகம் அனோஜா களுஆரச்சி தெரிவித்தார்.
இதன்படி கண்டி, மொனராகலை உள்ளிட்ட பல பிரதேசங்களில் நீர் விநியோகம் ஏற்கனவே கண்காணிப்பு முறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குருநாகலுக்கு நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.