சமனல நீர்த்தேக்க மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ள போதிலும், ஏனைய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அவசர மின் கொள்வனவுகள் மூலம் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டிய அவசியமில்லை எனவும், தென் மாகாணத்தை மின்சார விநியோக வலையமைப்புடன் இணைக்கும் பணியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் நிறைவு செய்ய முடியும் எனவும், அதனால் பெறப்படும் மேலதிக மின்சாரம் மட்டுப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
அத்துடன், மின்சாரத் தேவை குறைந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், நாளாந்த மின்சாரத் தேவை அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.