காணி தகராறு காரணமாக தனது சகோதரனைக் கொன்ற 24 வயது இளைஞன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
சூரியவெவ – கொக்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஒரு வீட்டினுள் சடலம் ஒன்று இருப்பதாக 119 அவசர இலக்கத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பின் பேரில், பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
நிலத் தகராறு காரணமாக சந்தேகநபரின் இளைய சகோதரன் தனது மூத்த சகோதரனை அடித்துக் கொன்றது தெரியவந்தது.
எனினும் கொலையை செய்த நபர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.