பம்பலப்பிட்டி – டுப்ளிகேஷன் வீதியில் ஜூபிலி புலஸ் சந்திக்கு அருகில் இன்று (14) காலை தனியார் பேருந்தொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பேருந்தொன்றும், தும்முல்ல பகுதியிலிருந்து வந்த லொறியுடன் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேருந்தின் சாரதி வீதி சமிக்ஞைகளை பொருட்படுத்தாது செல்ல முற்பட்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.