கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையை எதிர்காலத்தில் பத்தாம் தரத்தில் நடத்துவது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதனூடாக ஒரு வருடத்துக்கு முன்னதாகவே மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழையும் வாய்ப்பை பெறவுள்ளனர்.