வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெட்ரிகோ வீதியில் அமைந்துள்ள 8 மாடிக் கட்டிடத்தில் இருந்து கீழே வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
கட்டிடத்தில் இருந்து வீழ்ந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேளையிலே உயிரிழந்ததாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தை பெட்ரிகா வீதியில் வசிக்கும் 24 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.