விவசாயம், பெருந்தோட்டங்கள்,நீர்ப்பாசனம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சுக்களை ஒன்றிணைக்கும் அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளை உள்ளடக்கிய விவசாய நவீனமயமாக்கலுக்கான பணிக்குழு விரைவில் அமைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஒன்றிணைப்பு, ஒன்பது மாகாண சபைகளின் வளங்களுடன் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளை திறமையாக கையாள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.