களுத்துறை மாவட்ட வைத்தியசாலைகளின் தாதியர்களினால் இன்று (11) முன்னெடுக்கப்படவிருந்த ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பதுரலிய பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர் ஒருவரை பிம்புர பிரதேச வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்தமை தொடர்பில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடக்கப்படவிருந்தது.
எனினும் குறித்த இடமாற்றம் இரத்துச் செய்யப்படுவதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் எழுத்து மூலம் அறிவித்தார்.
இதனையடுத்து பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் செயலாளர் அஜித் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.