இலங்கை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், நாட்டில் முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த தருணம் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கடன் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை அடைவதற்கு அரசாங்கம் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும், எனவே முதலீட்டாளர்கள் இலங்கை சந்தையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் சென்னையில் நடைபெற்ற “இன்வெஸ்ட் ஸ்ரீலங்கா” மன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.