இந்தியாவின் பிரிவினைக்கு காங்கிரஸே காரணம் எனவும் 1974ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி அரசாங்கமே வழங்கியது எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்
இந்தியா மற்றும் இலங்கை இடையே அமைந்துள்ள கச்சத்தீவு, பாரம்பரியமாக இலங்கை மற்றும் இந்திய மீனவர்களால் பயன்படுத்தப்பட்டது.
1974ம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி இந்தோ – இலங்கை கடல்சார் ஒப்பந்தத்தின்’ கீழ் கச்சத்தீவை இலங்கையின் பகுதியாக ஏற்றுக்கொண்டார்.
எனவே, காங்கிரஸ்காரர்கள் அரசியலுக்காக இந்தியாவை மூன்றாகப் பிரித்தார்கள் என்று மக்களவையில் தமது அரசாங்கம் மீது கொண்டு வரப்பட்ட அவநம்பிக்கை பிரேரணைக்கு பதிலளிக்கும் போது பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சுமத்தினார்
இந்தநிலையில் கச்சத்தீவை இந்தியாவிற்கு மீண்டும் பெற்றுக்கொள்வது தொடர்பில்இ தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம் தொடர்ந்தும் கடிதம் எழுதி வருவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.