ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறிய அளவில் நெற் பயிர்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான இலவச யூரியா உரம் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண சாவகச்சேரி கமநல சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிஸூகோஷி ஹிடோகி, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, சாவகச்சேரி கமல சேவைகள் திணைக்களத்துக்குட்பட் 2, 777 சிறிய விவசாயிகளுக்கு யூரியா உரப் பொதிகள் வழங்கப்பட்டன.