பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கர வண்டியும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டியின் சாரதி எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதியதில் முச்சக்கரவண்டியின் சாரதியும் பின்னால் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இருவரும் பலாங்கொடை மற்றும் பல்லேபெத்த பிரதேசத்தில் வசிக்கும் 53 மற்றும் 59 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெல்மடுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.