Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் பலி

நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் பலி

ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

லுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று (30) சில நண்பர்களுடன் ஹோட்டலில் தங்கிய போது நீச்சல் தடாகத்தில் குளித்துள்ளார்.

இதன்போதே அவர் நீச்சல் தடாகத்தில் மூழ்கிய நிலையில் மீட்டெடுக்கப்பட்டு கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles