Monday, September 15, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇருவேறு பகுதிகளில் யானை தாக்கி இருவர் பலி

இருவேறு பகுதிகளில் யானை தாக்கி இருவர் பலி

மஹவ மற்றும் மெதிரிகிரிய பகுதிகளில் யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

மெதிரிகிரிய புதிய நகரத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (28) அதிகாலை வீட்டின் வௌியே வந்த 72 வயதான ஆண் ஒருவரை யானை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் மெதிரிகிரிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மஹவ – சியவுத்தாகம பகுதியில் யானை தாக்கி 43 வயதாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதிக்குள் இன்று அதிகாலை நுழைந்த யானையை விரட்டுவதற்கு முற்பட்ட போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சடலம் மஹவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles