யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மட்டுவில் வடக்கு பகுதியிலுள்ள வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்க்கப்பட்டவர் 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்பவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.