எதிர்காலத்தில் இலங்கையில் இருந்து சீனாவிற்கு கறுவாவை ஏற்றுமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாக ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.பி.பி.திஸ்னா தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி சந்தையில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கறுவாவுக்கு அதிக கேள்வி உள்ளது.
கசியா இலவங்கப்பட்டை நுகரும் நாடுகளில், சீனா தற்போது முதலிடத்தில் உள்ளது.
எனவேஇ சீனாவுக்கு இலவங்கப்பட்டை ஏற்றுமதி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தால், அது நாட்டின் ஏற்றுமதித் துறையில் பாரிய பாய்ச்சலாக அமையும் என பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.