Wednesday, February 4, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபலாங்கொடையில் ஒருவர் கொலை

பலாங்கொடையில் ஒருவர் கொலை

பலாங்கொடை -புலத்கம பிரதேசத்தில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்த நபரை பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்க உறவினர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் செல்லும்போதே அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles