செய்திகள்உள்நாட்டுயாழ்.போதனா வைத்தியசாலை விடுதியில் ஆணொருவர் சடலமாக மீட்பு

யாழ்.போதனா வைத்தியசாலை விடுதியில் ஆணொருவர் சடலமாக மீட்பு

நேற்றிரவு, இணுவில் பகுதியில் உள்ள விடுதியில் போதை ஊசி ஏற்றிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான விடுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு பழக்கமான குறித்த இளைஞன் நேற்று இரவு விடுதிக்கு வந்துள்ளார்.

எனினும் பின்னர் அவரை காணாத நிலையில்இ அவரை தேடிச் சென்றபோது விடுதியின் ஒரு பக்கத்தில் அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவரின் அருகில் ஊசி மூலம் போதை ஏற்றியதற்கான அடையாளங்கள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles