Monday, March 23, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரு வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

இரு வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

இரண்டு வேன்கள் இன்று (19) அதிகாலை நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியாவில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த டொல்பின் வகை வேன் ஒன்றும் கொட்டகலையில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற சிறிய ரக வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சிறிய ரக வேனை ஓட்டிய சாரதி குடிபோதையில் இருந்ததாகவும், விபத்தின் பின்னர் அவர் தப்பிச் சென்றதாகவும் திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் இரண்டு வேன்களிலும் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதுடன் இரண்டு வேன்களும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பில் திம்புல பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles