இன்றைய தினம் நாடாளுமன்றில் விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அவர் உரையாற்றவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அண்மைக் காலமாக தரமற்ற மருந்துகள் காரணமாக சிலர் உயிரிழந்துள்ளதுடன், பலர் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.