சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் பலத்த சூறாவளி தாக்கம் ஏற்பட்டுள்ளது.
தாலிம் எனும் புயல் 140 கிலோமீற்றர் வேகத்தில் தென் சீனாவை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் இருந்த சுமார் 230,000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன், விமானங்கள் மற்றும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று (18) காலைக்குள் சூறாவளி வேகம் குறைந்து வியட்நாமை நோக்கி நகரும் என சீன வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.