Friday, July 25, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகெப் வண்டி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயம்

கெப் வண்டி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயம்

மொரட்டுவை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தொன்றில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை எகொட உயன பகுதியில் பெலவத்தை நோக்கி பயணித்த கெப் வண்டியொன்று டயரை மாற்றுவதற்காக வீதியோரத்தில் தரித்திருந்த பேருந்துடன் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் கெப் வண்டியில் பயணித்த ஐவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எகொட உயன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles