திருக்கோவில் – கோமாரி கடற்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கடற்படையினருக்கு அறிவித்துள்ளனர்.
அந்த அறிவிப்பின்படி கடற்படையின் டோரா கப்பல் அந்த இடத்தை நெருங்கி வருவதாக கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நேற்று (16) நள்ளிரவு 12 மணியளவில் தீ அணைக்கப்பட்டதுடன், குறித்த இடத்திற்குச் சென்று அவதானிக்கும் வரை தீ விபத்துக்கான காரணம் குறித்த தகவல்களை தெரிவிக்க முடியாது என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.