இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 55,566 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் இந்தியாவில் இருந்தே அதிகளவானோர் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.
8,169 பேர் இந்தியாவில் இருந்தும், 4,474 பேர் பிரித்தானியாவில் இருந்தும், 2,893 பேர் சீனாவில் இருந்தும் இந்த மாதத்தில் இலங்கைக்கு அதிகளவில் வந்துள்ளனர்.
இதன்மூலம் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 680,440 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.