எதிர்வரும் பெரும் போகத்தில் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இரசாயன உரம் இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியதாகவும், அவரிடம் இருந்து நல்ல பதில் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.