மருந்துகள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை விரைவாக விசாரிக்க ஐந்து நிபுணர்களைக் கொண்ட சுயாதீன நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த குழு சுகாதாரத் துறை தொடர்பாக எழும் பிரச்சினைகள் குறித்து சுயாதீன விசாரணையை மேற்கொண்டு, உடனடி நடவடிக்கைக்கான பரிந்துரைகளை வழங்கும்.
அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்